Tuesday, February 15, 2011

வாலண்டைன்ஸ் டே!!


 சர்ப்பரைசா சயந்திரம் எதாவது வாங்கிட்டு போகணும்ன்னு நினைச்சேன், ஆனா மறந்துட்டேன். அம்மணி, ராத்திரி வரைக்கும் வெயிட் பண்ணி தூங்கறதுக்கு முன்னாடி கேட்டாங்க. இன்னைக்கு எதாவது கிப்ட் வாங்கி கொடுக்கணும்ன்னு தோணிச்சான்னு, அப்பத்தான் ஞாபகம் வந்திச்சி. சரி வழக்கம் போல சமாளிப்போம்ன்னு, வாங்கனும்ன்னு இருந்தேன், மறந்துட்டேன்னு சொன்னேன். ஆமா உங்களுக்கு எப்போதான் என் நினைப்பு வரும். போன் பண்ணினாலே முதல் வார்த்தையே வச்சிரவான்னு கேப்பீங்க, நீங்களாவது ரொமான்சா ஒரு கிப்ட் வாங்கி தர்றதாவது. பிறந்தநாள், நியூ இயர் இப்படி எந்த நாள் வந்தாலும் எங்க அம்மா அப்பா எதாவது வாங்கி தருவாங்க, நீங்க இது வரைக்கும் ஞாபகம் வச்சி வாங்கி தந்தது உண்டா, அப்படின்னு அம்மணி அடிக்கிகிட்டே போனாங்க. எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம, எப்போவும் யூஸ் பண்ற ஆயுதமா, இன்னக்கி எனக்கு ஒரே தலவலி, ஆபிஸ் வேலை செய்யவே முடியல, அதோட ஒரே தூக்கமா வந்திச்சி அப்படின்னு சொல்ல, உடனே அம்மணி அப்படியா சரி தூங்கி நல்ல ரெஸ்ட் எடுங்க, அப்படின்னு சொன்னாங்க, இது தான் நேரம்ன்னு நல்ல கண்ண மூடி தூங்கிட்டேன், அடுத்த முறையாவது ஞாபகமா எதாவது வாங்கி கொடுக்கணும்.